ad

Pages

குத்தாட்டம் போட தயக்கமில்லை: சமீரா ரெட்டி




படங்களில் குத்துப் பாடலுக்கு ஆடினால் தனி கெளரவம் கிடைக்கிறது என்று நடிகை சமீரா ரெட்டி கூறியுள்ளார்.
தமிழில் கௌதம் இயக்கத்தில் உருவான வாரணம் ஆயிரம் படத்தில் அறிமுகமானவர் சமீரா ரெட்டி.

இவர் தமிழ் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் நடித்து வருகிறார்.

பாலிவுட்டில் உருவாகும் பிரகாஷ் ஜா இயக்கத்தில் சக்ரவியூக் என்ற படத்தில் ஒரு குத்துப் பாட்டுக்கு ஆடியுள்ளார் சமீரா.

இதுகுறித்து அவர் கூறுகையில், குத்துப் பாடல்களுக்கு ஆடுவது பெருமையான ஒன்றாக மாறியுள்ளது.

குத்துப்பாடலுக்கு ஆடினார் தனி கெளரவம் கிடைக்கிறது. உரிய அங்கீகாரமும் கிடைக்கிறது என்றார். எனவே குத்துப்பாடல்களுக்கு ஆடுவதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

ஒரு படத்தில் குத்துப் பாடல் இருக்கிறதா என்று மக்களே கேட்கும் அளவுக்கு தற்போது நிலைமை மாறியுள்ளது வரவேற்புக்குரியது.

மேலும் ஒரு படத்தின் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தி குத்துப்பாடல்களுக்கு மட்டுமே உண்டு என்று கூறியுள்ளார் சமீரா ரெட்டி.

சோகத்தை மறக்க சினிமா தான் பெஸ்ட்: நயன்தாரா




சோகத்தை மறக்க சினிமாவும், எனது குடும்பமும் தான் எனக்கு பெரும் உதவியாக உள்ளது என்கிறார் நயன்தாரா.
சிம்புவை காதலித்து பிரிந்த நயன்தாரா, அதன்பின் பிரபுதேவாவை காதலித்தார்.
இருவரும் திருமணம் செய்து கொள்ள தயாராக இருந்தனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு திடீரென பிரிந்த பின்பும், இது குறித்து அதிகம் பேசாமல் இருந்தார் நயன்தாரா.
இந்நிலையில் ஸ்ரீராம ராஜ்யம் படத்தில் நடித்ததற்காக ஆந்திர அரசின் நந்தி விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து நயன்தாரா கூறுகையில், ஸ்ரீராம ராஜ்யம் படம் நான் எதிர்பார்க்காமல் எனக்கு கிடைத்தது. கவர்ச்சி வேடங்களில் இருந்து ஒதுங்கி, குடும்ப பாங்கான வேடங்களில் நடித்து வந்தபோது இப்படம் கிடைத்தது.
அப்போது எழுந்த விமர்சனங்களுக்கு எல்லாம் நான் அமைதி காத்தேன். இந்த படம் மூலம் விமர்சகர்களுக்கு பதில் அளித்தேன். அது எல்லாம் சீதை வேடத்தில் ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொண்டதால் நடந்தது.
தொடர்ந்து ராமாயணம், மகாபாரதம் போன்ற புராண கதை படங்களில் நடிக்க விரும்புகிறேன். நான் வித்தியாசமான பெண், எந்த நிலையிலும் வெற்றி பெறுபவள் என சிலர் கூறலாம். ஆனால் நான் மற்றவர்களை போல் சாதாரணமானவள்தான்.
குளிர், மழை, வெயில் என எந்த சீசனிலும் உழைத்துக் கொண்டே இருப்பது எனக்கு பிடித்தது. சினிமாதான் எனக்கு எல்லாமே. எனக்கு ஏற்பட்ட பிரச்னைகள், இதயம் உடைந்த சம்பவங்கள் ஆகியவற்றிலிருந்து என்னை மீட்டது சினிமாதான்.
எனது சோகத்தை மறக்கச் செய்த மருந்து, எனது பணிதான். அதே போல் எனது குடும்பமும் எனக்கு உறுதுணையாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.

Pictures of Deepika Padukone


Deepika Padukone (born 5 January 1986) is an Indian actress and model. She appears mostly in Hindi films, as well as Tamil and Kannada language films. Born to badminton player Prakash Padukone, she chose to become an actress.
In 2006, Padukone made her acting debut through the Kannada film Aishwarya. The following year, she made her Hindi film debut in Om Shanti Om, for which she earned the Filmfare Best Female Debut Award. It remains her biggest commercial success. She subsequently appeared in Love Aaj Kal (2009) and Housefull (2010). While the former earned her a Filmfare nomination in the Best Actress category, the latter emerged as a commercial success. Soon after, Padukone featured in Homi Adajania's commercially successful dramedy, Cocktail (2012) and earned unanimous critical appreciation for her performance