ad

Pages

உலகக் கிண்ணத் தோல்வி: அணித்தலைவர் பதவியிலிருந்து ஜெயவர்த்தன விலகல்


டி20 உலகக் கிண்ணத்தில் மே‌ற்‌கி‌ந்‌‌திய ‌தீவுகள் அணியுடனான படுதோல்வியை அடுத்து டி20 அணியின் அணித்தலைவர் பொறுப்பிலிருந்து ஜெயவர்த்தன விலகியுள்ளார்.
நேற்றைய இறுதி போட்டி முடிந்தவுடன் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.





இலங்கை டி20 அணியின் அணித்தலைவர் பதவியை இளைஞர் ஒருவருக்கு வழங்க வேண்டும் என்றும் தெரிவுக் குழுவை ஜெயவர்த்தன கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், டி20 அணிக்கு இளம் தலைமை தேவைப்படுகிறது.

இந்த ஆண்டு இறுதியில் அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ள இலங்கை அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு தலைமை ஏற்பேன் என்றார்.

அந்தத்தொடருக்கு பின்பு அணித்தலைவர் பதவியில் தொடருவது பற்றி முடிவு எடுப்பேன் என்றும் டி20 ஓவர் அணியில் நான் விளையாட வேண்டும் என்று புதிய அணித்தலைவர் விரும்பினால் விளையாடுவேன் எனவும் கூறியுள்ளார்.

மேலும், ஏஞ்சலா மேத்யூஸ் புதிய அணித்தலைவராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment